”சன்னதியில் இன்றளவும் காணப்படும் பிரம்மரின் தண்டம்”!!

பிற்காலத்தில் மருத மர வனமாக இருந்த இப்பகுதியை பாண்டிய மன்னன் ஒருவன் ஆட்சி செய்கிறான்.

அந்த மன்னன் ஒரு நாள் வேட்டையாட திருப்புடைமருதூர் மருத மர காட்டிற்குள் வந்த போது மான் ஒன்றை கண்டு துரத்துகிறான்.

அந்த மானின் மீது அவன் அம்பை எய்ய, அந்த மானோ ஒரு மருத மர பொந்திற்குள் சென்று மறைகிறது.

மறைந்த அந்த இடத்தை தோண்டுமாறு மன்னன் வீரர்களிடம் ஆணையிட, அவர்களும் அந்த இடத்தை தோண்டுகிறார்கள்.

அப்போது அந்த இடத்தில் இருந்து ஒரு சிவலிங்கம் வெளிப்படுகிறது.

அதனை பார்த்து அதிசயித்த மன்னனுக்கு, இந்த லிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து கோவில் கட்டுவாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்கிறது.

அதன்படி மன்னனும் திருப்புடைமருதூரில் திருக்கோவில் கட்டி அந்த இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான் என்பது வரலாறு.

இன்றைக்கும் தலபுராண வரலாற்றில் சொல்லப்பட்ட பிரம்ம தண்டத்தை முதலாம் கிழக்குச் சுற்றில் பரிவார தேவதை சன்னதியான சூரியன் சன்னதியில் கண்டு தரிசித்து மகிழலாம்.

இத்தரிசனக் காட்சி வேறு எந்த தலங்களிலும் பார்க்க முடியாத ஒன்றாகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *