காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு !!

காஞ்சிபுரம்;
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை கிளம்பிய நிலையில், இதனை பார்த்த கார் ஓட்டுநர் உடனடியாக காரை சாலையில் நிறுத்திவிட்டு காரை விட்டு வெளியேறினார்.

ஓட்டுநர் காரைவிட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் காரின் முன்பக்கத்தில் இருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில், தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *