தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு!!

சென்னை
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றுள்ளனர்.

கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றுள்ளனர். 29 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், 20க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இந்த கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “ஒன்றிய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்””தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை.

எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம். தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். மாநிலங்களோடு மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல்களை தொடங்கவேண்டும் என கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *