சென்னை:
சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மார்க்சிய தத்துவ மேதை தோழர் கார்ல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தோம்.
அந்த கோரிக்கையை ஏற்று இன்று (3.4.2025) தோழர் கார்ல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
இந்த அறிவிப்பை மேற்கொண்ட முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.