ரியாத்:
ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது.
செரீனா பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், 3வது சுற்றில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இகா ஸ்வியாடெக் போராடி 7-6 (7-3) என வென்றார்.
இதில் சுதாரித்துக் கொண்ட அனிசிமோவா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் அரையிறுதிக்கும் தகுதிபெற்றார்.
ஏற்கனவே கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.