வாக்​காளர் பட்​டியலில் உள்ள குறை​களை நீக்​கவே வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​த (எஸ்ஐஆர்) பணி நடை​பெறுகிறது – ஜே.பி.நட்டா தகவல்!!

புதுடெல்லி: ​
வாக்​காளர் பட்​டியலில் உள்ள குறை​களை நீக்​கவே வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​த (எஸ்ஐஆர்) பணி நடை​பெறுகிறது என்று மத்​திய சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் ஜே.பி. நட்டா தெரி​வித்​தார்.

மாநிலங்​களவை​யில் நேற்று நடை​பெற்ற தேர்​தல் சீர்​திருத்​தம் தொடர்​பான விவாதத்​தில் கலந்​து​கொண்டு மத்​திய அமைச்​சர் நட்டா பேசி​யதாவது:

வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் ​(எஸ்ஐஆர்) மூலம் வாக்​கு​களை திருட பாஜக முயற்​சிக்​கிறது என்று காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் புகார் கூறுகின்​றன.

தேர்​தல் ஆணை​யத்​தின் மீதான செயல்​பாடு​கள் மீதும், நம்​பகத்​தன்மை மீதும் யாரும் கேள்வி எழுப்ப முடி​யாது.

வாக்காளர் பட்​டியலில் உள்ள குறை​பாடு​கள், இறந்தவர்களின் பெயர்​கள் போன்​றவற்றை எஸ்ஐஆர் மூலம் நீக்கி வரு​கிறது.

1952 முதலே எஸ்ஐஆர் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. நேரு பிரதம​ராக இருந்​த​ போது 1952, 1957, 1961-ம் ஆண்​டு​களில் எஸ்ஐஆர் பணி​கள் நடை​பெற்​றன.

லால் பகதூர் சாஸ்​திரி பிரதம​ராக இருந்​த​போது 1965-லும், இந்​திரா காந்தி பிரதம​ராக இருந்​த​போது 1983-லும், ராஜீவ் காந்தி பிரதம​ராக இருந்​த​போது 1987, 1989 ஆகிய ஆண்​டு​களி​லும், பி.வி.நரசிம்​ம​ராவ் பிரதம​ராக இருந்​த​போது 1992-லும் எஸ்ஐஆர் பணி​கள் நடை​பெற்​றன.

2002-ல் வாஜ்​பாய் ஆட்​சிக்​காலத்​தி​லும், 2004-ல் மன்​மோகன் சிங் ஆட்​சிக்​காலத்​தி​லும் இந்​தப் பணி நடை​பெற்​றது. எனவே, இது புதிய விஷயமல்ல. அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின்​படி​தான் தேர்​தல் ஆணை​யம் இதை நடத்தி வரு​கிறது.

ஆனால், இது சட்​டத்​துக்கு புறம்​பான விஷ​யம் என்​பது​போல் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் குறை கூறி வரு​கின்​றன. இது கண்​டிக்​கத்​தக்​கது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *