நீண்ட இடைவெளிக்​குப் பிறகு காஞ்சி திரும்பிய காமாட்சி அம்மன் கோயில் யானைகள்!!

காஞ்சிபுரம்: ​
திருச்சி யானைகள் முகாமில் பராமரிக்​கப்​பட்டு வந்த காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான 3 பெண் யானைகள், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி மீண்​டும் காஞ்​சிபுரம் கொண்டு வரப்​பட்டு சங்கர மடத்​தின் நிர்​வாகி​களிடம் நேற்று முன்​தினம் ஒப்​படைக்​கப்​பட்​டன. அந்த யானை​களுக்கு பூஜைகள் நடை​பெற்​றன.

காஞ்​சிபுரம் காமாட்சி அம்​மன் கோயிலுக்கு சொந்​த​மான சந்​தி​யா, இந்​து, ஜெயந்தி ஆகிய 3 பெண் யானைகள் சங்கர மடத்​தால் பராமரிக்​கப்​பட்டு வந்​தன.

இவை கடந்த 2019-ம் ஆண்டு மருத்​து​வச் சிகிச்​சை, கூடு​தல் பராமரிப்​புக்​காக திருச்சி எம்​.ஆர். பாளை​யத்​தில் உள்ள வனத்​துறை யானை​கள் முகா​முக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

நீதி​மன்ற உத்​திர​வைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்​குப் பிறகு, இந்த யானை​களை மீண்​டும் சங்கர மடத்​திடம் ஒப்​படைக்க வனத்​துறை முடிவு செய்​தது.

அதன்​படி நேற்று காஞ்​சிபுரத்​தில் சங்கர மடத்​தின் நிர்​வாகி​களிடம் இந்த யானைகள் ஒப்​படைக்​கப்​பட்​டன.

இதனைத் தொடர்ந்து இந்த யானைகள்கோனேரிக்​குப்​பத்​தில் உள்ள கஜசாலைக்கு கொண்டு செல்​லப்​பட்​டன.

தற்​போது அந்த யானைப் பண்​ணை​யில் பராமரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. அங்கு யானை​களுக்​கான சிறப்பு பூஜைகளை நடத்த நீதி​மன்​றம் அனு​மதி அளித்​துள்​ளது.

சுமார் 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு காமாட்சி அம்​மன் கோயில் யானைகள் காஞ்​சிபுரம் திரும்​பி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *