சட்டப்பேரவை தேர்தலில் காங்​கிரஸ் போட்​டி​யிட விரும்​பும் 39 தொகு​தி​களின் பட்​டியல் இறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல்!!

சென்னை:
திமுக விரை​வில் பேச்​சு​வார்த்​தைக்கு அழைக்க உள்ள நிலை​யில், அகில இந்​திய காங்​கிரஸ் மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தலை​மையில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில் காங்​கிரஸ் போட்​டி​யிட விரும்​பும் 39 தொகு​தி​களின் பட்​டியல் இறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தல் நெருங்கி வரும் நிலை​யில், தொகுதி பங்​கீட்டை இறுதி செய்ய காங்​கிரஸ் தீவிர​மாக உள்​ளது.

இந்​நிலை​யில், திமுக எம்​.பி. கனி​மொழி, டெல்​லி​யில் ராகுல் காந்​தியை கடந்த வாரம் சந்​தித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.

அதனைத் தொடர்ந்​து, காங்​கிரஸ் போட்​டி​யிட விரும்​பும் தொகு​தி​கள் பட்​டியலை தயாரிக்க மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கரிடம் ராகுல் தெரி​வித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதுதொடர்​பாக ஆலோ​சிக்க கிரிஷ் சோடங்​கர் நேற்று முன்​தினம் இரவு சென்னை வந்​தார். அப்​போது விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசும்​போது, ஒரு புதிய கட்சி காங்​கிரஸூடன் கூட்​டணி வைக்க விரும்​பு​கிறதென்​றால், அந்த அளவுக்கு காங்​கிரஸ் வலிமை​யாக இருப்​பதைக் காட்​டு​கிறது.

திமுக​வுடன் கூட்​டணி பேச்​சு​வாரத்தை நடத்​தும் விவ​காரத்​தில் எங்​கள் தரப்​பில் தாமதம் இல்​லை. பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளோம். இன்னும் பேச்​சுவார்த்தையை தொடங்காததால், காங்​கிரஸ் போட்​டி​யிடும் தொகு​தி​கள் எண்​ணிக்​கையை இறுதி செய்​ய​வில்லை என்​றார்.

பின்னர் சென்னை சத்​தி​யமூர்த்​தி பவனில் நேற்று நடை​பெற்ற காங்​கிரஸ் மூத்த தலை​வர் ஓமந்​தூர் ராம​சாமி ரெட்​டி​யாரின் 131-வது பிறந்​தநாள் விழா​வில் பங்​கேற்ற மாநிலத் தலைவர் செல்​வப்​பெருந்​தகை செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “திமுக​விடம் இருந்து காங்​கிரஸ் கைநழுவி போக​வில்​லை.

தொகுதி பங்​கீடு தொடர்​பாக ராகுல்- கனி​மொழி இடையே பேச்​சு​வார்த்தை சுமுக​மாக நடந்​தது. இன்​னும் ஓரிரு நாட்களில் பேச்​சு​வார்த்​தைக்கு அழைப்​ப​தாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்​றார்.

இதன்​தொடர்ச்​சி​யாக கிரிஷ் சோடங்​கர், செல்வப்​பெருந்தகை, கட்சியின் தேசிய செயலா​ளர்​கள் சூரஜ் ஹெக்​டே, நிவேதித் ஆல்​வா, சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வர் ராஜேஷ்கு​மார் ஆலோசனை நடத்​தினர்.

இதில், தமிழகத்​தில் ஒவ்வொரு மக்​கள​வைத் தொகு​தி​யிலும் தலா ஒரு சட்​டப்​பேரவை தொகுதிவீதம், 39 தொகு​தி​களை அடை​யாளம்கண்டு பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இதை தலை​மைக்கு அனுப்பி ஒப்​புதல்​பெற்​று, திமுக​விடம் பட்டியல் வழங்​கப்பட உள்​ளது.

மேலும் இந்த பேச்​சு​வார்த்​தை​யின்போது, உள்​ளாட்சி தேர்​தலில் போட்​டி​யிடும் இடங்​கள் தொடர்​பாக​வும் பேசி முடிவு செய்​வது எனவும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

மேலும், இம்​மாதம் காங்​கிரஸ் நடத்​தும் 3 மாநாடு​கள் குறித்​தும் அதில் பங்​கேற்​கும் மூத்த தலை​வர்கள் மல்​லி​கார்​ஜுன கார்​கே, ராகுல், பிரி​யங்கா ஆகியோரின் பிரச்​சார ஏற்​பாடு​கள் குறித்தும் ஆலோ​சிக்​கப்​பட்​ட​தாக காங்​கிரஸ் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இதற்​கிடை​யில், தேர்தலில் போட்​டி​யிட 5 ஆயிரத்​துக்கும் மேற்பட்டோரிடம் விருப்ப மனுக்​கள் பெறப்​பட்ட நிலை​யில், அதை மாவட்​டங்களுக்கு அனுப்​பி, அங்கு மாவட்ட வேட்​பாளர் ஆய்​வுக் குழுக்​களை அமைத்​து பரிசீலிக்​கு​மாறு செல்​வப்​பெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *