முருகன் கோயில்​கள் தைப்​பூசத் திரு​விழா – ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘அரோக​ரா’ கோஷத்​துடன், பால்​குடம், காவடிகளை சுமந்து வந்து நேர்த்​திக் கடனை நிறைவேற்​றினர்!!

சென்னை:
முருகன் கோயில்​கள் தைப்​பூசத் திரு​விழா நேற்று விமரிசை​யாக நடை​பெற்​றது. ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘அரோக​ரா’ கோஷத்​துடன், பால்​குடம், காவடிகளை சுமந்து வந்து நேர்த்​திக் கடனை நிறைவேற்​றினர்.

தமிழ்க் கடவுளான முரு​கப் பெரு​மானுக்கு உகந்த தைப்​பூசத் திரு​விழா நேற்று விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது.

இதை யொட்​டி, சென்னை வடபழனி முருகன் கோயி​லில் அதி​காலை முதலே பக்​தர்​கள் கூட்​டம் கட்​டுக்​ கடங்​காத வகை​யில் காணப்​பட்​டது. அதி​காலை 4 மணிக்கு நடைதிறக்​கப்​பட்​டு, திருப்​பள்​ளியெழுச்சி மற்​றும் விஸ்​வரூப தரிசனம் நடை​பெற்​றது.

குழந்​தைகள், பெண்​கள் உட்பட ஏராள​மான பக்​தர்​கள் பால் காவடி, பன்​னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்​தும், அலகு குத்​தி​யும், தீ மிதித்​தும் நேர்த்​திக்​கடன் செலுத்​தினர்.

முரு​கப் பெரு​மா​னுக்கு ராஜ அலங்​காரம், விபூதி அலங்​காரம் உள்​ளிட்ட சிறப்பு அலங்​காரங்​கள் செய்​யப்​பட்டு தீபா​ராதனை நடை​பெற்​றது.

இரவு 8.30 மணி அளவில் வடபழனி ஆண்​ட​வர் மயில் வாக​னத்​தில் நான்கு மாட​வீ​தி​களில் வலம் வந்து அருள்​பாலித்​தார்.

இரவு 10 மணி வரை பக்​தர்​கள் கூட்​டம் காணப்​பட்​டது. ஞாயிறு விடு​முறை நாள் என்​ப​தால், அதி​காலை முதலே பக்​தர்​கள் குவி​யத் தொடங்​கினர். இதனால், ஆற்​காடு சாலை, 100 அடி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது.

மிக நீண்ட வரிசை​யில் காத்​திருந்து பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். பக்​தர்​களுக்கு அன்​ன​தானம், நீர்​மோர் வழங்​கப்​பட்​டது. போலீ​ஸார் பாது​காப்புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

பாரி​முனை கந்​தக்​கோட்​டம், சிறு​வாபுரி, குன்​றத்​தூர், குரோம்​பேட்டை குமரன்​குன்​றம், வல்​லக்​கோட்​டை, திருப்​போரூர் கோயில்களி​லும் முரு​கப் பெரு​மானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை​கள் செய்​யப்​பட்​டன.

ஏராள​மான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர். ஆயிரக்​கணக்​கானோர் பால்​குடம், காவடி சுமந்து வந்து வழிபட்​டனர்.

மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர், புரசை​வாக்​கம் கங்​காதீஸ்​வரர், சைதாப்​பேட்டை காரணீஸ்​வரர் உள்​ளிட்ட சிவன் கோயில்​களில் உள்ள முருகன் சந்நி​தி​களி​லும் திரளான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

அனைத்து கோயில்களி​லும் பக்தர்கள் எழுப்பிய பக்தி முழக்​கம் விண்​ண​திர ஒலித்​தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *