மரபுவழி, நவீன பாணி ஓவி​யம் மற்​றும் சிற்​பக்​கலைகளில் சிறந்த கலைஞர்​களுக்கு கலைச் செம்​மல் விருதுகளை வழங்​கிய​ அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன்!!

சென்னை:
மரபுவழி, நவீன பாணி ஓவி​யம் மற்​றும் சிற்​பக்​கலைகளில் சிறந்த கலைஞர்​களுக்கு கலைச் செம்​மல் விருதுகளை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் வழங்​கி​னார்.

தமிழக அரசின் கலை பண்​பாட்​டுத் துறை சார்​பில் ஒவ்​வோர் ஆண்​டும் மரபுவழி, நவீன பாணி ஓவி​யம் மற்​றும் சிற்​பக் கலைகளில் திறமை​யான கலைஞர்​களுக்கு ‘கலைச்செம்​மல்’ விருது வழங்கி கவுரவிக்​கப்​படு​கிறது.

இந்த விருது ரூ.1 லட்​சம் பரிசு, செப்​புப் பட்​ட​யம், பாராட்​டுச் சான்​றிதழ் ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது. ஆண்​டு​தோறும் 6 புகழ்​பெற்ற கலைஞர்​களுக்கு இவ்​விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன.

அந்த வகை​யில் 2025-26-ம் ஆண்​டுக்​கான கலைச்​செம்​மல் விருதுக்கு மரபுவழி ஓவியப் பிரி​வில் மா.​பாலசுப்​ரமணி​யன், மரபுவழி சிற்​பப் பிரி​வில் தே.கண்ட ஸ்த​பதி மற்​றும் தஉ.பத்​ம​நாபன், நவீன பாணி ஓவியப் பிரி​வில் கோ.​வில்​வ​நாதன் மற்​றும் மு.​ராஜா, நவீன பாணி, சிற்​பப் பிரி​வில் ச.சாந்தி ஆகியோர் தேர்​வுசெய்​யப்​பட்​டனர்.

அவர்​களுக்கு தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், கலைச் செம்​மல் விருதுகளை தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித்​துறை அமைச்​சர் மு.பெ.​சாமி​நாதன் வழங்​கி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் சுற்​றுலா, பண்​பாடு மற்​றும் அறநிலை​யங்​கள் துறை செயலர் டாக்​டர் க.மணி​வாசன், கலை பண்​பாட்​டுத் துறை இயக்​குநர் எஸ்​.

வளர்​ம​தி, இணை இயக்​குநர் ஜெ.​கார்​குழலி உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *