சென்னை:
நடிகர் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா திருமணம் கடந்த 26-ந்தேதி உதய்ப்பூரில் நடந்தது. விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து இருவரது திருமண வரவேற்பு விழா ஐதராபாத்தில் நேற்று பிரமாண்டமாக நடந்தது. விழாவில் தென்னிந்திய திரை உலகத்தினர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

விழாவில் சரத்குமார், ராதிகா, கார்த்தி, சிரஞ்சீவி, நாகார்ஜூனா, அமலா, வெங்கடேஷ், நானி, ஸ்ரீகாந்த், அவரது மனைவி சிவரஞ்சனி, ராம்சரண், அல்லு அர்ஜூன், ராணா, நவீன் பாலி ஷெட்டி, ரவி தேஜா, நாகசைதன்யா, நடிகைகள் கிருத்தி ஷெட்டி, மிருணாள்தாக்கூர் உள்பட ஏராளமானோர் பங்கேற்று விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகாவுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.