அனைத்து வேட்​பாளர்​களுக்​கும் ஒரே மாதிரி​யான பாது​காப்பு வழங்க டிஜிபிக்கு தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்சனா பட்நாயக் கடிதம்!!

சென்னை:
விஜய் பிரச்​சார விவ​காரத்​தில் நடந்​தது என்ன என்​பது குறித்து அறிக்கை தர தேர்​தல் அதி​காரிக்கு அறி​வுறுத்​தி​யுள்ள தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக், அனைத்து வேட்​பாளர்​களுக்​கும் ஒரே மாதிரி​யான பாது​காப்பு வழங்க டிஜிபிக்கு கடிதம் எழு​தி​யுள்​ளார்.

நேற்று முன்​தினம் தவெக தலை​வர் விஜய், தான் போட்​டி​யிடும் பெரம்​பூர் தொகு​தி​யில் வேட்பு மனுத்​தாக்​கல் செய்​து​விட்​டு, அங்​கிருந்து பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார்.

நான்கு இடங்​களில் பிரச்​சா​ரத்​துக்கு அனு​மதி கோரி​யிருந்த நிலை​யில், பெரம்​பூர் மற்​றும் கொளத்​தூரில் பேசிய விஜய், வில்​லி​வாக்​கம், அண்​ணாநகரில் பேசாமல் வீடு திரும்​பி​னார்.

கொளத்​தூர் தொகு​தி​யில் போலீ​ஸார் அமைத்​திருந்த தடுப்​பைத் தாண்டி தவெக-​வினர் முன்​னேறி சென்​ற​தால், தள்ளு முள்ளு ஏற்​பட்​டது.

இதில் சிலர் கீழே விழுந்​தனர். இதனால், போதிய பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​ய​வில்லை என்று குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இது தொடர்​பாக தேர்​தல் அதி​காரி​களிடம் தவெக தரப்​பில் புகார் தெரவிக்​கப்​பட்​டது. இதையடுத்தே விஜய் வில்​லி​வாக்​கம், அண்​ணாநகர் பிரச்​சா​ரத்தை ரத்து செய்​து​விட்​டுச் சென்​றார்.

இந்​நிலை​யில், இந்த விவ​காரத்​தில் எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​கள் குறித்து தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் கூறிய​தாவது:

பெரம்​பூர் பிரச்​சா​ரத்​தில் நடந்​தது என்ன என்​பது குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்​தல் அதி​காரிக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

அதேசம​யம், அனை​வ​ருக்​கும் ஒரே மாதிரி​யாக பாது​காப்பு வழங்​கும்​படி டிஜிபிக்கு கடிதம் எழுதப்​பட்​டுள்​ளது.

மாவட்ட தேர்​தல் அதி​காரி​யின் அறிக்கை அடிப்​படை​யில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்.

ரோடு ஷோவைப் பொறுத்​தவரை, அதற்​கான அனு​மதி தொடர்​பாக, அரசு வெளி​யிட்ட அரசாணை தேர்​தல் ஆணை​யத்​துக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது.

வேட்​பாளர்​களுக்கு வேட்பு மனுவை பூர்த்தி செய்​வ​தில் பிரச்​சினை இருக்​கக்​கூ​டாது என்​ப​தற்​காக அந்​தந்த தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் வேட்​பாளர்​களுக்கு பயிற்சி அளித்​துள்​ளனர்.

வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க அதிக விண்​ணப்​பங்​கள் வந்​துள்ள நிலை​யில், அவை பரிசீலிக்​கப்​பட்டு வரும் ஏப்​.6-ம் தேதி வெளி​யாகும் வாக்​காளர் பட்​டியலில் பெயர்​கள் சேர்க்​கப்​படும்.

தமி​ழ​கத்​தில் இது​வரை 15 பதிவு செய்​யப்​பட்ட அரசி​யல் கட்​சிகளுக்கு பொதுச் சின்​னத்தை தேர்​தல் ஆணை​யம் ஒதுக்​கி​யுள்​ளது.

பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகள் தொடர்​பாக தேர்​தல் பார்​வை​யாளர்​களு​டன் இணைந்து தேர்​தல் நடத்​தும் அதி​காரி​கள் ஆய்வு செய்து தகவல் அளிப்​பார்​கள்.

வேட்பு மனுபரிசீலனை​யின் போது, வேட்​பாளர் உட்பட 4 பேர் அனு​ம​திக்​கப்​படு​வர்​கள். வேட்​பாள​ருக்கு பதில் அவரது முகவ​ரும் பங்​கேற்​கலாம்.

தேர்​தல் பார்​வை​யாளர் முன்​னிலை​யில், தாக்​கல் செய்த வரிசை அடிப்​படை​யில் வேட்பு மனுக்​கள் பரிசீலிக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *