சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி – ருதுராஜ் கடும் அதிருப்தி!!

சென்னை:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டிக்குப் பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்​டன் ருதுராஜ் கெய்க்​வாட் கூறிய​தாவது: ஆடு​களம் இரண்டு வித​மான வேகத்​தில் இருந்​தது.

பந்து எழும்​பும் வித​மும் சீராக இல்​லாமல் ஏறி இறங்​கியது. ஆரம்​பத்​திலேயே நாங்​கள் அதிக விக்​கெட்​டு​களை இழந்திருக்​கா​விட்​டால் 170 அல்​லது 180 ரன்​களை எட்டியிருக்க முடி​யும்.

அது சவாலான இலக்​காக இருந்திருக்​கும். இருப்​பினும், பேட்​டிங் பவர்​பிளே முடிந்த பிறகும் விக்​கெட்​டு​கள் அடுத்​தடுத்து விழுந்​த​தால், குறிப்பிட்ட இலக்கை கொடுப்​பது சந்​தேகம் என்றே கருதினேன்.

சில ஷாட்​களை விளை​யாடு​வது சற்று கடின​மாக இருந்தது. ஆடு​களம் இப்​படி இருக்​கும் என்று எதிர்பார்க்கவில்​லை. ஆடு​களம் எப்​படிச் செயல்​படும் என்று கணிப்​பது மிக​வும் கடின​மாக இருந்​தது.

இங்கு நாங்கள் விளை​யாடிய கடந்த மூன்று போட்​டிகளில், ஓரளவிற்கு ஆடு​களத்​தின் தன்​மை​யைப் புரிந்துகொண்டோம். 60 சதவீதம் இப்​படித்​தான் இருக்​கும் அல்​லது 70 சதவீதம் இப்​படித்​தான் இருக்​கும் என்று ஓரளவுக்கு எங்​களால் உணர முடிந்​தது.

ஆனால் இந்​தப் போட்​டி​யில் ஆடு​களம் எப்​படிச் செயல்​படும் என்​பது குறித்து எங்​களுக்கு எந்த யோசனை​யும் இல்​லை.

ஆடு​களத்​துக்கு ஏற்​ற​வாறு எங்​களை மாற்​றிக்​கொண்டு விளை​யாட நினைப்​ப​தற்​குள் கால​தாமத​மாகி​விட்​டது. அதன் பிறகு, நாங்​கள் முயற்சி செய்​தும் அது கைகூட​வில்​லை. எது​வும் சாதக​மாக அமைய​வில்​லை.

முதல் பந்​திலிருந்தே இன்று எங்​களுக்கு ஒரு மோச​மான நாளாக அமைந்​தது என்​று​தான் கூறு​வேன். பீல்​டிங்​கில் நாங்​கள் சற்று மந்​த​மாக இருந்​த​தாக உணர்ந்​தேன்.

இந்த ஆட்​டத்​தின் முடிவை தள்ளி வைத்து​விட்டு அடுத்த போட்டியை நோக்கி நாங்​கள் பயணிக்க வேண்​டும். இவ்வாறு ருது​ராஜ் கெய்க்​வாட்​ கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *