ஹார்சென்ஸ்:
டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பைக்கான பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய ஆடவர் அணி நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது.
இதில் இந்தியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் லக் ஷயா சென் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் எஃப்ரைம் ஸ்டீபனையும், ஆயுஷ் ஷெட்டி 21-8, 21-6 என்ற செட் கணக்கில் ஸ்ரே தண்டையும் தோற்கடித்தனர்.
ஹெச்.எஸ்.பிரனாய் 21-11, 21-17 என்ற செட் கணக்கில் ரிஷி ஹோன்டா பூபதியை வீழ்த்தினார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-14, 21-16 என்ற செட் கணக்கில் ரிஸ்கி ஹிடாயத், ஜாக் யூ ஜோடியை வீழ்த்தியது. அதேவேளையில் ஹரிகரன் அம்சகருணன், எம்.ஆர்.அர்ஜூன் ஜோடி 21-12, 21-10 என்ற செட் கணக்கில் ஆண்டிகா ராமடியன்ஸ்யா, எப்ரைம் ஸ்டீபன் சாம் ஜோடியை வென்றது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (29-ம் தேதி) சீனாவுடன் மோதுகிறது.