பள்ளிக்கூட புத்தகப்பை அதிக கனமாக உள்ளது; அதை தூக்கி சுமந்தால் முதுகு வலிதான் வருகிறது!! முதல்வருக்கு மாணவி கோரிக்கை…

சென்னை:
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்வர் விஜய் தனது தொகுதியான பெரம்பூருக்கு நேற்று முதல்முறையாக வந்தார். அவரை தொகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அப்போது, 8-ம் வகுப்பு படிக்கும் ருத்ரா என்ற மாணவி, முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்பியுள்ளார்.

ஆனால், முதல்வரை சந்திக்க முடியாததால் வருத்தத்தில் இருந்துள்ளார்.

இதுபற்றி மாணவியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘பள்ளிக்கூட புத்தகப் பை அதிக கனமாக உள்ளது. அதை தூக்கி சுமந்தால் முதுகு வலிதான் வருகிறது.

எனவே, புத்தகப்பை எடையை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *