அறவழியில் போராடிய இளை ஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ராகுல் காந்தியை டெல்லி காவல்துறை குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் !! தவெக கண்டனம்!!

சென்னை:
“அறவழியில் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய ராகுல் காந்தியை டெல்லி காவல்துறை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்” என்று தமிழக வெற்றிக் கழகம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

நீட் வினாத்​தாள் கசிவுக்கு பொறுப்​பேற்று மத்​திய அமைச்சர் பதவி விலக வலி​யுறுத்​தி, ஜூலை 20 நாடளுமன்றத்தை முற்​றுகை​யிட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியாகச் சென்றனர்.

அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்​தி​யதுடன், கண்ணீர் புகைக்​குண்டு​களை வீசி​யும் கூட்டத்தை கலைத்​தனர்.

இதற்கிடையில், போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள மாணவர்களுக்கு ஆதர​வாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் காங்​கிரஸ் கட்சியினர் நேற்று ராஜாஜி மார்க் பகு​தி​யில் இருந்து பிரதமர் இல்​லம் அமைந்​துள்ள லோக் கல்​யாண் மார்க் நோக்கி பேரணியாகச் சென்​றனர்.

இதில் காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே, பிரி​யங்கா காந்​தி, கே.சி.வேணுகோ​பால், பவன் கேரா உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள், கேரள முதல்​வர் வி.டி.சதீசன் மற்​றும் கட்சி எம்​.பி.க்​கள் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்​னர் பிரதமர் இல்​லம் வெளியில் அவர்கள் போராட்​டத்தில் ஈடுபட்டனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்​ட ராகுல் காந்​தியை மத்​திய அமைச்​சர்​கள் ஜிதேந்​திர சிங், பியூஷ் கோயல் ஆகியோர் சந்​தித்து போராட்​டத்தை முடித்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்​டனர்.

இருப்பினும் தொடர் போராட்டத்தில் ஈடு​பட்​ட ராகுல், பிரியங்கா உள்​ளிட்ட காங்​கிரஸ் கட்​சி​யினரைப் போலீ​ஸார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று பேருந்​துகளில் ஏற்றிச் சென்றனர்.

அப்போது ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. தகவல றிந்து மந்திர் மார்க் போலீஸ் நிலையத்துக்கு சோனியா காந்தி விரைந்து சென்றார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் கைது நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழகம் வண்மையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும்.

குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத்தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.

நீட் தேர்வால் ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவது நின்றபாடில்லை.

எனவே மத்திய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *