சட்டப்பேரவையில் முழுமையான விவரங்கள் இல்லாமல் கேள்விகளை எழுப்பக்கூடாது; பேரவையில் பேச வேண்டியதை தற்போதே தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்!! உதயநிதி அறிவுறுத்தல்…

சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் மே 6-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பது தொடர்பான திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவையில் ஆளும்கட்சியின் வியூகங்களை திறம்பட எதிர்கொள்வது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதுதவிர மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, எம்எல்ஏ.க்கள் குதிரை பேரம், காவல் மரணங்கள், மேகேதாட்டு அணை, கோயில் நிலங்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேரவையில் கேள்வியெழுப்பவும் திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்பின் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “சட்டப்பேரவையில் முழுமையான விவரங்கள் இல்லாமல் கேள்விகளை எழுப்பக்கூடாது. பேரவையில் பேச வேண்டியதை தற்போதே தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் தொகுதிகள் மட்டுமின்றி அருகே உள்ள தொகுதிகளில் நிலவும் முக்கிய பிரச்சினைகளையும் குறிப்பெடுத்து முன்வைக்க வேண்டும்.

மேலும், நேரலையில் ஒளிபரப்பப்படுவதால் கவனமாக செயல்பட வேண்டும்” என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *