நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,800 ஆகவும் அதிகரிப்பு!!

ப்காத்மாண்டு:
நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆகவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,800 ஆகவும் உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக நேபாள காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந் தவர்களில் இதுவரை 1,127 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில், சித்வான் மாவட்டத்தில் இருந்து 348 பேரின் உடல் களும், நாவல்ப்பராசி கிழக்கு மாவட்டத்தில் இருந்து 217 பேரின் உடல்களும், நாவல்ப்பராசி வடக்கு மாவட்டத்தில் இருந்து 190 பேரின் உடல்களும், நுவாகோட் மாவட்டத்தில் இருந்து 155 உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 6,541 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4,858 பேர் காணாமல் போயுள்ளனர்.

அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளுக்குப் புறப்பட்ட 5வது இந்திய விமானம்: இதற்கிடையில், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அளித்து வருகிறது.

ஏற்கனவே, 4 சிறப்பு விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்களும் சிறப்பு மீட்புப் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று 5வது விமானம் நேபாளத்துக்கு புறப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய விமானப்படையின் 5வது விமானம் நேபாளத்துக்கு புறப்பட்டுள்ளது.

அதிநவீன சிறப்பு கருவிகளுடன் 11 மீட்புக் குழுவினரும், 5.5 டன் அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் அதில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் கண்டுபிடிப்பு: வெள்ளப்பெருக்கில் காணாமல் போன சிலரை தொடர்பு கொள்ள முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தெரிவித்த நேபாள சுற்றுலா வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் சுனில் ஷர்மா, காணாமல் போன வர்கள் என அறிவிக்கப்பட்ட 5 பேர் இமெயில் அல்லது தொலைபேசி மூலமாக கடந்த சில நாட்களில் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கில் சிக்கிய வெளிநாடுகளைச் சேர்ந்த 324 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நேபாள வெளியுறவு அமைச்சகம், அதேநேரத்தில் காணாமல்போன 590 பேரைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *