கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என ஆளுநர் ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்!!

விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என ஆளுநர் ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச்சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, இன்றைய தினம், தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு R.N. ரவி அவர்களைச் சந்தித்தோம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *