விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அனைத்துக் கட்சிகளும் புறக்கணியுங்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்!!

விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.


பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ”விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளும். திமுகவின் தலைமை கழக பேச்சாளர் போல் சபாநாயகர் செயல்படுகிறார். சட்டப்பேரவையில் விவாதம் நடத்தவே திமுக பயப்படுகிறது.” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *