”மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை” இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் !!

2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

தற்பொழுது இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

ஆர்.ஜே பாலாஜி இப்படத்தை இயக்குவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது இச்செய்தி வெளியாகியுள்ளது. சுந்தர் சி தற்பொழுது வடிவேலுவை வைத்து திரைப்படம் இயக்கி கொண்டு இருக்கிறார், அதைமுடித்துவிட்டு இப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *