கோலி பேட்டை வைத்து 3 பந்தில் 2 சிக்சர்களை விளாசி ரசிகர்களை மகிழ்வித்த ஆகாஷ் தீப்!!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் அடிக்க, இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இது வங்கதேசத்தை விட 52 ரன்கள் முன்னிலையாகும்.

இந்த போட்டியில் முதலில் இருந்தே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

பேட்டர்கள்தான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றால், வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அவரது பங்குக்கு முதல் 3 பந்தில் 2 சிக்சர்களை விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார்.

இதில் ஒரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் அவர் விராட் கோலி பேட்டை வைத்து இந்த 2 சிக்சர்களை அடித்துள்ளார்.

இவர் சிக்சர்கள் அடிக்கும் போது வெளியில் இருந்த விராட் கோலி சிரித்தப்படி பும்ராவிடம் பேசி கொண்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி அவரது பேட்டை ஆகாஷ் தீப்புக்கு பரிசாக வழங்கி இருக்கிறார். இதனை ஆகாஷ் தீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி விராட் பாய் என பதிவிட்டிருந்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *