தமிழக மக்களின் நலன் மீது பெரிதும் கவனம் செலுத்தும் மோடிக்கு நன்றி – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!!

தமிழக மக்களின் நலன் மீது பெரிதும் கவனம் செலுத்துகின்ற விதமாக, தொடர்ந்து இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை வழங்கி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான பணிகளுக்கு, நமது மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

128 மெட்ரோ இரயில் நிறுத்தங்களுடன், 118 கி.மீ தொலைவிற்கு இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை நான்கு திசைகளிலும் முழுவதுமாக இணைக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு, 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான பணிகளுக்கு, நமது மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. 128 மெட்ரோ இரயில் நிறுத்தங்களுடன், 118 கி.மீ தொலைவிற்கு இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நலன் மீது பெரிதும் கவனம் செலுத்துகின்ற விதமாக, தொடர்ந்து இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை வழங்கி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *