மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10,449 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9,542 கன அடியாக சரிவு!!

மேட்டூர் / தருமபுரி:
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10,449 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9,542 கன அடியாக குறைந்தது.

அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணையின் நீர்மட்டம் 106.98 அடியில் இருந்து 107.44 அடியாகவும், நீர் இருப்பு 74.18 டிஎம்சியில் இருந்து 74.82 டிஎம்சியாகவும் உயர்ந்து உள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் 10 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 9,500 கனஅடியாக குறைந்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *