நாமக்கல்லில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகல்!!

நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் உட்பட அக்கட்சியில் இருந்து 50 பேர் கூண்டோடு விலகினர்.

நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளரும் வழக்கறிஞருமான திரு.வினோத்குமார் நாமக்கல்லில் இன்று (28-11-2024) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தேன். கட்சி நடத்திய பல்வேறு கூட்டங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்காக பணம் செலவழித்து கூட்டங்களை கூட்டினோம். கட்சிக்காக பல லட்சங்கள் செலவழித்தோம். கட்சியில் எங்களுக்கு மரியாதை இல்லை.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நோக்கமே மதச்சார்பின்மை தான். தற்போது சீமான் மதவாதத்தை ஆதரிக்கும் போக்கில் பேசி வருகிறார். இது பொது மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சீமானை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதனால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். எனவே அக்கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்து உள்ளோம்” என தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *