வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிமுதல் செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில், அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில், தற்போது 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை காங்கேசன் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 18 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
8 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்ததது. கைதான மீனவர்களை இலங்கை கடற்படை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றது.