சென்னை மெட்ரோ ரயில்களில் நடப் பாண்டில் கடந்த நவம்பர் மாதத்தில் 83 லட்சத்து 61 ஆயிரத்து 492 பேர் பயணம் !!

சென்னை:
நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பான பயண வசதி காரணமாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில் கடந்த நவம்பர் மாதத்தில் 83 லட்சத்து 61 ஆயிரத்து 492 பேர் பயணம் செய்துள்ளனர்.

அதே நேரத்தில், இந்த எண்ணிக்கையை அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 7 லட்சத்து 22 ஆயிரத்து 504 பயணிகள் குறைவாக பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த நவம்பர் மாதத்தில் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35 லட்சத்து 62 ஆயிரத்து 463 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 27 லட்சத்து 50 ஆயிரத்து 030 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 599 பேரும், குழு பயணச் சீட்டு முறையை பயன்படுத்தி 6,208 பேரும்,

சிங்கார சென்னை அட்டையை ( தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20 லட்சத்து 42 ஆயிரத்து 192 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *