கேரளா
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முகமது ஷரீப் என்பவர் கடந்த மாதம் புதுச்சேரி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
லாரி டிரைவரான இவர், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து 465 கோடி ரூபாய்க்கு மேல் ஆன்லைன் மூலம் மோசடி செய்தது போலீசாருக்கு தெரிய வந்த போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து, இந்த வழக்கை மேலும் விசாரணை செய்தபோது, மோசடி குழுக்களிடம் இருந்து 331 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டது.
மேலும், இந்த மோசடியில் இன்னும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், குறிப்பாக கேரளாவை சேர்ந்த பிரபல டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று தான் இந்த மோசடிக்கு மையப்புள்ளி என்றும் கூறப்படுகிறது.