தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முன்னிலையில் இணைய உள்ளேன்- நடிகை ரஞ்சனா நாச்சியார் பேட்டி!!

மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியின் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். 
  
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வருகிறது.  2ம் ஆண்டு விழாவையொட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரை நிகழ்த்த உள்ளார்.

தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து விஜய் உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாங் கிஷோர் பங்கேற்றுள்ளார். 

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியின் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நேற்று பாஜகவில் இருந்து அவர் விலகிய நிலையில், தற்போது தவெகவில் இணைய அக்கட்சியின் 2ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு வருகை தந்துள்ளார். 

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *