சென்னையில் ஜெயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் தொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல் ஆணையர்!!

சென்னை;
சென்னையில் ஜெயின் பறிப்பு கொள்ளையன் என்கவுண்டர் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: செயின் பறிப்பு சம்பவத்தில் மூன்றாவது குற்றவாளியை ரயிலில் வைத்து பிடித்தோம்

செயின் பறிப்பு சம்பவத்தில் பிடிக்கப்பட்ட மூன்று பேரும் ஈரானிய கொள்ளையர்கள். மும்பை, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்குகள் உள்ளது

பைக் பறிமுதல் செய்ய ஜாபரை அழைத்து சென்ற போது பைக்கில் இருந்து துப்பாக்கி எடுத்து காவல் துறையினரை தாக்கியதால் என்கவுன்ட்டர்

செய்யப்பட்டது. கொள்ளையர்களிடம் இருந்து 26 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 100 சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்தோம்

கடந்தாண்டு நடந்த 34 செயின் பறிப்பு சம்பவத்தில் 33 இல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்காப்பு நடவடிக்கையாக என்கவுன்ட்டர் செய்யப்பட்டது.

உடைகளை மாற்றியுள்ளனர், ஆனால் ஷூக்களை மாற்றவில்லை, அதை வைத்து கண்டு பிடித்தோம்

தேடப்படும் குற்றவாளிகளில் டாப் 3ல் குற்றவாளி ஜாபர் இருந்தார் என கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *