இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு!!

சென்னை:
இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோடை காலத்தில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் . அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வாகனம் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக (ஏப்ரல் – 1) நேற்று முதல் இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே இன்று முதல் கொடைக்கானல் பகுதிக்கு அனுமதிக்கப்படும் என்றும், வேலை நாட்களில் நான்காயிரம் வாகனங்களும் விடுமுறை நாட்களில் ஆறாயிரம் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியன் சரவணன்‌ அறிவித்திருந்தார்.

இதனையடுத்து திண்டுக்கல் – தேனி எல்லை பகுதியான கெங்குவார்பட்டி சோதனை சாவடியில் இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 20,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *