சென்னை:
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் ஷோபா டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளிக்கடை இயங்கி வந்தது.
இந்த நிலையில், திடீரென ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கடையில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக கடையை விட்டு ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இருந்த போதிலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.