ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!!

தருமபுரி:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,500 கன அடி யாக தண்ணீர் அதிகரித்துள்ளது.


இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *