போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் கிருஷ்ணாவுக்கு மற்றும் அவரது நண்பர் கெவின் அகியோருக்கும்14 நாட்கள் நீதிமன்றக் காவல் !!

சென்னை;
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் கெவின் அகியோருக்கும்14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தற்போது நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலை போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா நேரில் ஆஜரான நிலையில் அவரிடம் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

முன்னதாக அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

இருப்பினும், போதைப்பொருள் சம்மந்தமாக தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் நேற்று சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீடு மற்றும் கார்களிலும் இன்று காலை போலீசார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தனக்கு இரைப்பை பிரச்சனைகள் இருப்பதாக கிருஷ்ணா தெரிவித்ததை அடுத்து, அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துக் கொண்டனர்.

நடிகர் கிருஷ்ணா மீது பண மோசடி புகார்

கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் வாயு கோளாறு, அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படுவது உள்ளிட்ட தனது உடல்நிலை பிரச்சினைகளுக்கான மருத்துவ சான்றிதழ்களையும் கிருஷ்ணா போலீசாரிடம் கொடுத்திருக்கிறார்.

உயர் ரக போதை பொருளை உபயோகப்படுத்தும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் விளக்கம் அளித்திருக்கிறார்.

மேலும், நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றத்தில் Code Word இருப்பது தெரியவந்துள்ளது. நண்பர்களுடன் அவர் செய்த சாட்டிங்கில் ரகசிய குறியீடு வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதை கண்டுபிடித்த் போலீஸார், 2020 முதல் கிருஷ்ணாவின் செல்ஃபோனில் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்துகின்றனர்.

நடிகர் கிருஷ்ணாவிடம் 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் நேற்று பிற்பகலில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவருடன் வளசரவாக்கத்தைச் சேர்ந்த அவரது நண்பர் கெவினையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜூலை 10ம் தேதிவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *