புதிய டிஜிபியை தேர்வு செய்வதில் இழுபறி!!

சென்னை:
தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சங்​கர் ஜிவால் ஆக. 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது.

சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் 1990-ல் தேர்​வாகி தற்​போது டிஜிபிக்களாக உள்ள தீயணைப்​புத் துறை இயக்​குநர் சீமா அகர்​வால், 1992-ல் தேர்​வான ஆவின் விஜிலன்ஸ் டிஜிபி ராஜீவ்​கு​மார், அதே ஆண்​டில் தேர்​வான காவல் உயர் பயிற்​சியக டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் முறையே முதல் 3 இடங்​களில் உள்​ளனர்.

அடுத்தடுத்த இடங்​களில் டிஜிபிக்​களான அபய்​கு​மார் சிங், வன்​னியபெரு​மாள், மகேஷ்கு​மார் அகர்​வால், வெங்​கட்​ராமன், வினித்​தேவ் வான்​கடே உள்​ளனர்.

வழக்​க​மாக புதிய சட்​டம்- ஒழுங்கு டிஜிபி பணி​யிடம் காலி​யாக உள்ள 3 மாதங்​களுக்கு முன்​னரே தமிழக அரசு அடுத்த தகு​தி​யான 8 பேரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்​பிவைக்​கும்.

அதில், எந்த குற்​றச்​சாட்​டு​களுக்​கும் உள்​ளா​காத சீனி​யாரிட்டி மற்​றும் தகு​தி​யின் அடிப்​படை​யில் முதல் 3 இடங்​களில் உள்​ளோரின் பட்​டியலை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் தமிழக அரசுக்கு மீண்​டும் அனுப்பி வைக்​கும்.

அதில், ஒரு​வரை தேர்வு செய்து தமிழக அரசு புதிய சட்​டம் ஒழுங்கு டிஜிபி​யாக நியமிக்​கும். இது​தான் நடை​முறை.

இந்​நிலை​யில், ஆக. 31-ம் தேதி​யுடன் டிஜிபி சங்​கர் ஜிவால் பணி ஓய்வு பெற உள்ள நிலை​யில், புதிய டிஜிபியை தேர்வு செய்​வதற்​கான 8 பேர் பட்​டியலை தமிழக அரசு இது​வரை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்பி வைக்​க​வில்லை என கூறப்​படு​கிறது.

தற்​போதைய டிஜிபிக்கு பணிநீட்​டிப்பு வழங்​கப்​படலாம் என்​றும் கூறப்​பட்​டது. ஆனால், அந்த நடை​முறை உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு எதி​ரானது என சுட்​டிக்​காட்​டப்​படு​கிறது.

தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் இன்​னும் 8 அல்​லது 9 மாதங்​களில் நடை​பெற உள்​ளது. எனவே புதிய டிஜிபி, தங்​களுக்கு சாதக​மானவ​ராக இருக்க வேண்​டும் என தமிழக அரசு விரும்​புவ​தாக​வும், அதனாலேயே புதிய டிஜிபி தொடர்​பான பட்​டியலை மத்திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​துக்கு அனுப்பி வைக்​காமல் காலம் தாழ்த்​து​வ​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

இப்​போது கூடு​தல் டிஜிபிக்​களாக உள்ள டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சந்​தீப் மித்​தல், பால நாகதேவி உள்​ளிட்​டோருக்கு வரும் ஜனவரி மாதம் முதல் தேதி​யில் டிஜிபி​யாக பதவி உயர்வு வழங்​கப்பட உள்​ளது.

எனவே, இவர்​களை​யும் சேர்த்து டிஜிபி பட்​டியலில் உள்ள யாரை​யா​வது ஒரு​வரை பொறுப்பு டிஜிபி​யாகவோ அல்​லது சிறப்பு டிஜிபியாகவோ சில மாதங்​கள் நியமிக்​கலாம்.

அதன் பிறகு தேர்​தல் நடை​முறை அமலுக்கு வந்த பின்​னர் தேர்​தல் ஆணை​யம் யாரை​யா​வது ஒரு​வரை சட்​டம் ஒழுங்கு டிஜிபி​யாக நியமிக்​கும் வரை அமைதி காக்​கலாம் என தமிழக அரசு நினைப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதுஒரு​புறம் இருக்க, டிஜிபி சங்​கர் ஜிவால் ஓய்​வுக்​குபிறகு, பொறுப்பு டிஜிபி நியமிக்​க​வும் சங்​கர் ஜிவாலின் பணிக்​காலத்தை நீட்டிப்பு செய்​ய​வும் இடைக்​கால தடை விதித்​தும் டிஜிபி பதவிக்கு தகு​தி​யான ஐபிஎஸ் அதி​காரி​களின் பட்​டியலை தமிழக அரசு உடனடி​யாக தயார் செய்ய உத்​தர​விட​வும் கோரியும் மதுரை உயர் நீதி​மன்ற கிளை​யில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

மேலும், தமிழகத்​துக்கு புதிய டிஜிபி​யா, பொறுப்பு டிஜிபியா அல்​லது சிறப்​பு டிஜிபி​யா என போலீ​ஸார்​ குழப்​ப நிலை​யில்​ உள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *