சென்னை மாவட்​டத்​தில் சுதந்​திர தினத்​தன்று மது விற்​பனை செய்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் – மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே எச்​சரிக்கை!!

சென்னை:
சென்னை மாவட்​டத்​தில் சுதந்​திர தினத்​தன்று மது விற்​பனை செய்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இது தொடர்​பாக வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சுதந்​திர தினம் நாளை (ஆக.15) கொண்​டாடப்​படு​கிறது. அன்று மது விற்​பனை செய்யக்​கூ​டாது என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை விதி​கள் மற்​றும் தமிழ்​நாடு மதுபானம் விதி​கள் ஆகிய​வற்​றின் கீழ் சென்னை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக், மது​பான சில்​லறை விற்​பனை கடைகள் மற்​றும் பார்​கள், உரிமம் பெற்ற கிளப் பார்​கள், ஓட்​டல் பார்​கள் என அனைத்​தும் ஆக.15-ல் மூடப்பட வேண்​டும்.

அறி​விப்பை மீறி மது விற்​பனை செய்​தால், மது​பானம் விற்​பனை விதி​களின்​படி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என ஆட்சி​யர் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இவ்​வாறு அதில்தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *