திருநெல்​வேலி​யில் இன்று நடை​பெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்கேற்பு!!

திருநெல்வேலி:
திருநெல்​வேலி​யில் இன்று நடை​பெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார். பாஜக சார்​பில் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழகம் முழு​வதும் 7 இடங்​களில் நடை​பெற உள்ளது.

முதல் மாநாடு நெல்​லை​யில் இன்று நடை​பெறுகிறது. வண்​ணார்​பேட்டை சத்​திரம் புதுக்​குளம் பகு​தி​யில் உள்ள ரயில்வே மேம்​பாலம் அருகே நடை​பெறும் இந்த மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்று சிறப்​புரை​யாற்​றுகிறார்.

பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன், கட்​சி​யின் முன்​னாள் மாநிலத் தலை​வர்​கள் அண்ணா​மலை, தமிழிசை சவுந்​தர​ராஜன், பொன்​.​ரா​தாகிருஷ்ணன், ஹெச்​.​ராஜா, தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், தேசிய மகளிரணித் தலை​வர் வானதி சீனி​வாசன் உள்ளிட்டோர் பங்​கேற்​கின்​றனர்.

நெல்​லை, தென்​காசி, தூத்​துக்​குடி, விருதுநகர், கன்​னி​யாகுமரி ஆகிய 5 மக்​களவை தொகு​தி​களுக்கு உட்​பட்ட பகு​தி​களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்​வாகி​கள் கலந்​து​கொள்​கின்​றனர். மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக மத்​திய அமைச்​சர் அமித் ஷா கேரள மாநிலம் கொச்​சி​யில் இருந்து விமானம் மூலம் இன்று மதி​யம் 2.50 மணிக்கு தூத்​துக்​குடி வரு​கிறார்.

அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் 3.10 மணிக்கு பாளை​யங்​கோட்டை ஆயுதப்​படை மைதானத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள ஹெலிபேடு தளத்​துக்கு வந்து இறங்​கு​கிறார். அங்​கிருந்து 3.25 மணிக்கு மாநாட்டு மேடைக்கு காரில் செல்​கிறார்.

மாநாடு முடிந்​ததும் ஹெலி​காப்​டரில் மீண்​டும் தூத்​துக்​குடி சென்​று, அங்​கிருந்து விமானம் மூலம் டெல்​லிக்கு செல்​கிறார். அமித் ஷா வரு​கை​யையொட்டி 2 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *