மதுரை ஆதீனத்​துக்கு எதி​ராக தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​ட ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான்!!

மதுரை:
மதுரை ஆதீனத்​துக்கு எதி​ராக ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான் தர்ணா போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

மதுரை முனிச்​சாலை அருகே 292-வது ஆதீனத்​தின் சமாதி உள்​ளது. இதன் முன்​பாக அமர்ந்து ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்​பு​ரான் நேற்று தர்​ணாப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

நான் 2018 ஜூலை முதல் 292-வது ஆதீன​மாக இருந்த குரு​மகா சன்​னி​தானத்​தின் கரங்​களால் தீட்சை பெற்​று, மதுரை ஆதீன மடத்​தின் தம்​பு​ரா​னாகப் பணிபுரிந்து வரு​கிறேன்.

292-வது ஆதீனம் 2021-ல் மகாசித்தி அடைந்த பிறகு, தற்​போதைய 293-வது ஆதீனத்​தின் கீழ் தம்​பு​ரா​னாகப் பணிபுரிந்து வரு​கிறேன்.

மதுரை ஆதீன மடத்​தின் 292-வது குரு​மகா சன்​னி​தானம் விருப்​பப்​படி, அடுத்த ஆதீன​மாக நான்​தான் வரவேண்​டும்.

ஆனால் தற்​போதைய ஆதீனம், 292-வது குரு​மகா சன்​னி​தானம் மற்​றும் தரு​மபுரம் ஆதீனத்​தின் கட்​டளையை நிறைவேற்​றாமல் வேறு ஒரு​வருக்​குப் பட்​டம் சூட்​டத் திட்​ட​மிட்​டுள்​ளார்.

மதுரை ஆதீனம் எந்த முடிவு எடுப்​ப​தாக இருந்​தா​லும் தரு​மபுரம் ஆதீனத்​தின் ஆலோ​சனைப்​படியே நடக்க வேண்​டும்.

தற்​போதைய மதுரை ஆதீனம், தரு​மபுரம் ஆதீனத்​துடன் ஆலோ​சனை செய்து 292-வது குரு​மகா சன்​னி​தானத்​தின் விருப்​பத்தை நிறைவேற்ற வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

பின்​னர், விஷ்வலிங்க தம்​பு​ரானிடம் போலீ​ஸார் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அதில் உடன்​பாடு ஏற்​பட்​டதையடுத்​து, அவர் போராட்​டத்​தைக் கைவிட்​டார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *