மகா சிவராத்திரியை முன்னிட்டு காரைக்கால் சனீஸ்வரர் கோவிலில் விடிய விடிய பக்தர்கள் தரிசனம்!!

புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் நேற்று மாலை முதல் நடை சாத்தப்படாமல் 4 கால பூஜைகள் நடந்தது. நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் விடிய விடிய தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து இன்று விடுமுறை தினமான சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டனர்.

முன்னதாக பக்தர்கள் அங்குள்ள நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.

சென்னை, திருச்சி, கோவை, சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து சனீஸ்வரரை வழிபட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *