தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் என்ன முட்டாள்களா?… கர்நாடக துணை முதல்வர்  டி.கே.சிவக்குமார் ஆவேசம்….

பெங்களூரு,

கர்நாடகாவில் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதாக சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக விவசாயிகள் மற்றும் ரைதா ஹிதாராக்ஷனா சமிதி அமைப்புகள் போராட்டம் நடத்தின.

மேலும், தமிழ்நாட்டில் கூட்டணி கட்சியான தி.மு.க.,வின் நலன்களைப் பாதுகாக்க கர்நாடகா காங்கிரஸ் அரசு ஆர்வமாக இருப்பதாக அம்மாநில பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் அம்மாநில துணை முதல்-மந்திரியும், நீர்வளத் துறை மந்திரியான டி.கே.சிவகுமார் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேஆர்எஸ் அணையிலிருந்து பெங்களூருக்கு தான் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்துக்கு அல்ல. என்ன ஆனாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது.

தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளன. தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல. பெங்களூருவுக்கு தண்ணீர் பம்ப் செய்யும் இடத்தில் நீர் மட்டம் குறைவாக உள்ளது.

தண்ணீர் பம்ப் செய்யப்படுவதற்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் நீர் இருக்க வேண்டும். இதனால் அந்த அளவை பராமரிக்க தண்ணீர் விடுவிக்கப்பட்டது. பெங்களூரின் தண்ணீருக்காக, நீர் திறக்கப்பட்டது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *