மேட்டூர் / தருமபுரி:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,278 கனஅடியிலிருந்து 6,719 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 6,278 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,719 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15,000 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் வரத்தைக் காட்டிலும் நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 115.88 அடியிலிருந்து 115.37 அடியாகவும், நீர் இருப்பு 87.05 டிஎம்சியிலிருந்து 86.27 டிஎம்சியாகவும் சரிந்துள்ளது.
இதனிடையே, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில தினங்களாக விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்றும் மாற்றமின்றி 6,500 கனஅடியாகவே பதிவானது.