பெங்களூரு சிறையில் கைதி​கள் மது அருந்​தி​விட்டு நடனம் ஆடும் வீடியோ!! 2 உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!!

பெங்களூரு:
பெங்​களூருவை அடுத்​துள்ள‌ பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் உள்ள தண்​டனை கைதி​கள் டிவி பார்த்​துக்​கொண்டே செல்​போனில் பேசுவது போன்ற வீடியோ அண்​மை​யில் வெளி​யானது.

இதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்த நிலை​யில், கைதி​கள் மது அருந்​தி​விட்டு நடனம் ஆடும் வீடியோ கன்னட சேனல்​களில் வெளி​யானது.

அந்த வீடியோ​வில் 10-க்​கும் மேற்​பட்ட கைதி​கள், மது அருந்​திக்​கொண்டு அசைவ உணவு, பழங்​கள் சாப்​பிடு​வது போல​வும் பிறகு பாட்டு பாடி நடனம் ஆடு​வது போன்ற காட்​சிகளும் பதி​வாகி இருந்​தன.

இந்த வீடியோ வெளி​யானதை தொடர்ந்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்​கட்​சி​யினர் ஆளும் காங்​கிரஸை கடுமை​யாக விமர்​சித்​தனர்.

எதிர்க்​கட்சி தலை​வர் ஆர்​.அசோகா கூறுகை​யில், ‘‘கை​தி​களிடம் சிறைத்​துறை அதி​காரி​கள் லட்​சக்​கணக்​கில் லஞ்​சம் வாங்​கு​கின்​றனர்.

அதன் காரண​மாகவே தீவிர​வாத வழக்​கிலும் கொலை வழக்​கிலும் கைதான குற்​ற​வாளி​கள் சிறை​யில் சொகு​சாக இருக்​கின்​றனர்.

மது அருந்​தி​விட்டு நடனம் ஆடும் அளவுக்கு சிறைச்​சாலை உல்​லாச விடு​தி​யாக மாறி​விட்​டது. அதற்கு ஊழலில் திளைக்​கும் காங்​கிரஸ் அரசே முதன்​மை​யான காரணம்’’ என குற்​றம்​சாட்​டி​னார்.

இந்​நிலை​யில் கர்​நாடக உள்​துறை அமைச்​சர் பரமேஷ்வரா கூறுகை​யில் ‘‘சிறை முறைக்​கேடு​களை ஒரு​போதும் ஏற்க முடி​யாது.

பெங்​களூரு மத்​திய சிறை​யின் தலைமை காவல் கண்​காணிப்​பாள​ராக இருந்த இமாம்​சாப் மியாகேரி, உதவி காவல் கண்​காணிப்​பாளர் அசோக் பஜந்​திரி ஆகியோர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்டு உள்​ளனர்.

இந்த சிறை விதி​மீறல் பற்றி விசா​ரிக்க சட்​டம்​-ஒழுங்கு கூடு​தல் டிஜிபி ஹிதேந்​திரா தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த குழு ஒரு மாதத்​தில் விசா​ரணை அறிக்கை வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. மது அருந்​தி​விட்டு நடனம் ஆடிய கைதி​கள் 4 பேர் மீது வழக்​குப்​ பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *