சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சபரிமலை சீசன் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 30 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் டிசம்பர் 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
அதன்படி, லோக்மானியா திலக் – காரைக்கால் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – மதுரை வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி – நிஜாமுதின் திருக்குறள் எக்ஸ்பிரஸ், மதுரை – நிஜாமுதின் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால் – தாம்பரம் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – மன்னார்குடி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி – பனாரஸ் காசி தமிழ் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் – திருச்சி ஹம்சபார் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் – பெரோஸ்பூர் ஹம்சபார் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ், செங்கோட்டை – தாம்பரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் – ராமேஸ்வரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் – புதுச்சேரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், லோக்மானியா திலக் – மதுரை எக்ஸ்பிரஸ், புதுச்சேரி – புதுடெல்லி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் – பனாரஸ் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் – அயோத்தியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – மதுரை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மதுரை – பிக்கானெர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தாம்பரம் – நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் – மன்னார்குடி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் – சேலம் எக்ஸ்பிரஸ் ஆகியவை இருமார்க்கமாக செல்லும்போதும் ஒரு நிமிடம் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.