தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் 5-ம் தேதி மேலாண்மைக் குழு கூட்டம்!!

சென்னை:
அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்​மைக் குழு (எஸ்​எம்​சி) கூட்​டம் வரும் 5-ம் தேதி நடை​பெறவுள்​ளது. தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் உள்ள பள்ளி மேலாண்​மைக் குழுக்​கள் 2024-ம் ஆண்டு மறுகட்​டமைப்பு செய்​யப்​பட்​டன.

இதையடுத்​து, 2024-26-ம் ஆண்​டு​களுக்​கான புதிய தலை​வர், உறுப்​பினர்​களை கொண்ட எஸ்​எம்சி குழுக்​களின் கூட்​டம் தற்​போது மாதந்​தோறும் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி, அடுத்த மாதத்​துக்கான கூட்​டம் வரும் 5-ம் தேதி மாலை 3 மணிக்கு நடத்​தப்பட உள்​ளது.

இந்​தக் கூட்​டத்​தில் பள்​ளி​கள் மற்​றும் மாணவர்​களின் வளர்ச்​சிக்​குத் தேவை​யான அம்​சங்​களை தீர்​மானங்​களாக நிறை வேற்​றிக் கொள்ள வேண்​டும்.

இதுத​விர, திறன் இயக்​கம், எண்​ணும் எழுத்​தும், உயர்கல்வி வழி​காட்டி திட்​டம், இடைநின்​றவர்​களைப் பள்​ளி​களில் சேர்த்​தல், மகிழ் முற்​றம், ஆட்​டிசம் குழந்​தைகளைக் கண்​டறிதல், மணற்​கேணி செயலி பயன்​பாடு, இல்​லம் தேடி கல்​வி, கலைத் திரு​விழா, மாணவர்​களின் ஆதார் புதுப்​பிதல் உட்பட பல்​வேறு அம்​சங்​கள் குறித்து விவா​திக்​கப்பட வேண்​டும் என aஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதற்​கான வழி​காட்​டு​தல்​களை பின்​பற்றி இந்த கூட்​டத்தை சிறப்​பாக நடத்தி முடிக்க வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *