அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை மீறி எந்த அசம்பாவித மும் செய்யாமல், ஜனநாயக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் – தலைமை தேர்தல் அதிகாரி..!

தேர்தல் தேதி குறிச்சாச்சு. இதற்காக தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 483 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.இன்று தான் மனுதாக்கல் செய்ய கடைசி நாள் . இந்த மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28ஆம் தேதி நடைபெறும். இதனைத் தொடர்ந்து இந்த மனுக்களை திரும்ப பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.

அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லோக்சபா தேர்தல் நடைபெறும் (ஏப்ரல் 19) நாளன்று பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே தலைமை தேர்தல் அதிகாரி வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு நாளன்று ஊழியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார். இது தவிர தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ன்று தொழிலாளர் நல ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை மீறி எந்த அசம்பாவிதமும் செய்யாமல், ஜனநாயக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும், இதற்காக தேர்தல் அதிகாரிகளுக்கு அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *