முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா அமைத்து கொடுத்த அதிரடி பாணி​யையே பின்​பற்றி வரு​கிறேன் – அபிஷேக் சர்மா பகிர்வு!!

புதுடெல்லி:
டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் பவர் பிளே​வில் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா அமைத்து கொடுத்த அதிரடி பாணி​யையே பின்​பற்றி வரு​கிறேன் என தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் இளம் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை​யில் சர்​வ​தேச டி 20 போட்​டிகளில் அறி​முக​மா​னார்.

தனது அதிரடி மட்டை வீச்​சால் அவர், தற்​போது ஐசிசி தரவரிசை​யில் முதலிடத்​தில் உள்​ளார். இது​வரை 34 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அவர், 2 சதங்​கள், 7 அரை சதங்​களுடன 1,199 ரன்​களை குவித்​துள்​ளார். ஸ்டிரைக் ரேட் 190.92 ஆக உள்ளது.

இந்​நிலை​யில் அபிஷேக் சர்மா கூறிய​தாவது: ரோஹித் சர்மா நாட்​டுக்​காக நிறைய செய்​துள்​ளார். பவர்​பிளே​யில் அவர் கொடுத்த தொடக்​கங்​களால் எப்​போதும் அழுத்​தம் இருக்​கும்.

நான் அணி​யில் சேர்ந்​த​போது, பயிற்​சி​யாள​ரும் கேப்​ட​னும் என்​னிட​மிருந்து அதையே விரும்பினார்​கள். முதல் சில பந்​துகளி​லிருந்தே தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்​வைதை நான் விரும்​புவ​தால், அது எனது பாணிக்​கும் பொருந்​தும் என்று உணர்ந்​தேன்.

நான் ரோஹித் சர்​மா​வின் அடிச்​சுவடு​களைப் பின்​பற்றி வரு​கிறேன், இந்த முறை​யில் விளை​யாடி இந்​தி​யா​வுக்​காக சிறப்​பாகச் செயல்​படு​வ​தில் நான் மிக​வும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் இன்​னும் முழு​மை​யாக முதிர்ச்​சி​யடைந்​து​விட்​டேன் என்று சொல்ல மாட்​டேன், ஏனென்​றால் எப்​போதும் முன்​னேற இடம் உண்​டு.

ஆனால் முதல் ஆறு ஓவர்​களில் ஆக்​ரோஷ​மான கிரிக்​கெட்டை விளை​யாடு​வதே எனது வேலை என்று நான் நினைக்​கிறேன். அதற்​காக நான் நிறைய பயிற்சி செய்து வரு​கிறேன். நான் ஒரு நல்ல தொடக்​கத்தை அளித்​தாலோ அல்​லது ஆரம்​பத்​தில் நல்ல நோக்​கத்​தைக் காட்​டி​னாலோ, அதை பின்​பற்றி அணி உந்​துதலை பெற முடி​யும். நான் எப்​போதும் இதை பற்றி மட்​டுமே சிந்​திப்​பேன்.

ஆக்​ரோஷ​மான கிரிக்​கெட்டை விளை​யாடு​வதற்கு குறிப்​பிட்ட வழி​யில் பயிற்சி செய்ய வேண்​டும். போட்​டிகளுக்கு முன்பு நான் எப்​போதும் அதைத்​தான் செய்​வேன்.

எனக்கு ஒரு வாரம் அல்​லது 10 நாட்​கள் கிடைக்​கும்​போது, அடுத்த தொடர் அல்​லது போட்​டிகளில் நான் எதிர்​கொள்​ளும் பந்து வீச்​சாளர்​களை மனதில் கொள்​வேன். இவை அனைத்​தும் நான் அந்​தத் திட்​டங்​களை எவ்​வாறு செயல்​படுத்​துகிறேன் என்​ப​தைப் பொறுத்து அமை​யும்.

வரவிருக்​கும் டி20 உலகக் கோப்​பைக்​காக பயிற்சி செய்து வரு​கிறேன். வெவ்​வேறு அணி​களுக்கு எதி​ராக வெவ்​வேறு சூழ்​நிலைகளில் இந்​தியா முழு​வதும் விளை​யாடு​வோம் என்​பது எனக்​குத் தெரி​யும், எனவே அதற்கு தயா​ராவது மிக முக்​கி​யம்.

வலை பயிற்​சி​யில் மற்ற அணி​களில் உள்ள பந்து வீச்​சாளர்​களை போன்று வீசக்​கூடிய​வர்​களை வீசச் சொல்​வேன். மேலும் அவுட்​-ஸ்​விங்​கர்​கள், இன்​-ஸ்​விங்​கர்​களை வீசச் கூறி பேட்​டிங் செய்​வேன்.

மேலும் புதிய பந்​துகளை பயன்​படுத்​தக்​கூறு​வேன். உலகக் கோப்பை தொடரில் எனக்கு எதி​ராக அதி​கவேகத்​தில் பந்​து​வீச மாட்​டார்​கள். கடந்த சில போட்​டிகளில் நான் அதை உணர்ந்​தேன். அதனால் இந்த விஷ​யத்​தி​லும்​ பணி​யாற்​றி வரு​கிறேன்​. இவ்​வாறு அபிஷேக்​ சர்​மா கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *