குடியரசு தினத்​தையொட்​டி, பல்​வேறு கட்​சிகளின் தலைமை அலு​வல​கங்​களில் கட்​சித் தலை​வர்​கள் தேசி​யக் கொடியேற்​றி, இனிப்​பு​கள் வழங்கி கொண்டாட்டம்!!

சென்னை:
குடியரசு தினத்​தையொட்​டி, பல்​வேறு கட்​சிகளின் தலைமை அலு​வல​கங்​களில் கட்​சித் தலை​வர்​கள் தேசி​யக் கொடியேற்​றி, இனிப்​பு​கள் வழங்கி கொண்​டாடினர்.

தமிழக பாஜக தலைமை அலு​வல​க​மான கமலால​யத்​தில் தெலங்​கானா மாநில முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​தர​ராஜன், முன்​னாள் ராணுவ வீரர்​களு​டன் தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார்.

தொடர்ந்​து, தொண்​டர்​கள் அனை​வருக்​கும் இனிப்​பு​கள் வழங்​கி​னார். இவ்​விழா​வில் தமிழக பாஜக மேலிடப் பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத் தலை​வர்​கள் கரு.​நாக​ராஜன், குஷ்பு உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்​டனர்.

தமிழக காங்​கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் குடியரசு தின விழா நேற்று நடை​பெற்றது. இதில் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை முன்​னிலை​யில் தமிழக காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​து, குங்ஃபூ விஜயன் தலை​மையி​லான சேவாதள அணிவகுப்பு மரி​யாதையை ஏற்​றுக் கொண்​டார்.

தொடர்ந்​து, தொண்​டர்​களுக்கு இனிப்பு வழங்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் சு.​திரு​நாவுக்​கரசர், கிராம கமிட்டி ஒருங்​கிணைப்​பாளர் பீட்​டர் அல்​போன்​ஸ், மாநில துணைத் தலை​வர்​கள் ஆ.கோபண்​ணா, சொர்ணா சேது​ராமன், மாவட்​டத் தலை​வர்​கள் டில்லி பாபு, கராத்தே செல்​வம் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

சென்​னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள தமாகா தலைமை அலு​வல​கத்​தில் கட்​சி​யின் தலை​வர் ஜி.கே.​வாசன், தேசி​யக் கொடியேற்​றி, மரி​யாதை செலுத்​தி, தொண்​டர்​களுக்கு இனிப்பு பழங்​கி​னார்.

தியாக​ராயநகரில் உள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில தலைமை அலு​வல​கத்​தில் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார்.

ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள மக்​கள் நீதி மய்​யம் தலைமை அலு​வல​கத்​தில், கட்​சி​யின் துணைத் தலை​வர் ஏ.ஜி.மவுரியா பங்​கேற்​று, தேசிய கொடியைக் ஏற்றி வைத்​து, அனை​வருக்​கும் இனிப்பு வழங்​கி​னார்.

இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் மாநிலச் செய​லா​ளர் கே.ஏ.எம்​.​முஹம்​மது அபூபக்​கர் தலை​மை​யில் நடை​பெற்ற குடியரசு தின விழா​வில், தேசிய கொடியை ஏற்​றி​வைத்து மரி​யாதை செலுத்​தப்​பட்​டது.

ராயப்​பேட்​டை​யில் உள்ள தமிழ்​நாடு ஐஎன்​டி​யுசி தலைமை அலு​வல​கத்​தில், தொழிற்​சங்க மாநிலத் தலை​வர் மு.பன்​னீர்​செல்​வம், தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​து இனிப்​பு வழங்​கி கொண்​டாடி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *