மொரீஷியஸில் உள்ள முரு​கன் கோயில்​களில் தைப்பூச விழா​வில் தமிழ் பக்​திப் பாடல்​களை பாட 7 பேர் கொண்ட குழுவை அனுப்​பி​ய தமிழக அரசு !!

சென்னை:
மொரீஷியஸில் உள்ள முரு​கன் கோயில்​களில் நடை​பெறும் தைப்பூச விழா​வில் தமிழ் பக்​திப் பாடல்​களை பாட 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அனுப்​பி​யுள்​ளது.

ஆப்​பிரிக்க கண்​டத்​தில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். இதன் மக்​கள்​தொகை 12 லட்​சம். இந்​திய வம்​சாவளி​யினர் இங்கு அதி​க​மாக உள்​ளனர். குறிப்​பாக தமிழர்​கள் அதி​க​மாக வசிக்​கின்​றனர்.

அங்கு கரும்​புத் தோட்​டங்​கள் மற்​றும் கட்​டு​மானப் பணி​களில் வலு​வான அடித்​தளமிட்ட இவர்​கள், இந்து சமய அடை​யாளத்​துடன் தைப்பூச விழாக்​களை​யும், தமிழ் மொழியை​யும் தற்​காலத்​தி​லும் சிறப்​பாகக் காத்து வரு​கின்​றனர். அரசி​யலிலும் முக்​கிய பங்​காற்​றுகின்​றனர்.

இந்த ஆண்டு வரும் பிப். 1-ம் தேதி தைப்பூச விழா மொரீஷியஸில் நடை​பெற உள்​ளது. 10 நாள் விரதம், கொடியேற்​றம் மற்​றும் பூக்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட காவடிகள் இத்​திரு​விழா​வின் சிறப்பு அம்​சங்​களாகும்.

இவ்​விழா தமிழ் சமூகத்​தின் ஒற்​றுமை​யை​யும், கலாச்​சார அடை​யாளத்​தை​யும் பறை​சாற்​றும் ஒரு திரு​விழா​வாக விளங்​கு​கிறது.

இந்த ஆண்டு விழாவை சிறப்​பாகக் கொண்​டாட அந்​நாட்டு அரசு, தமிழக அரசின் உதவியைக் கேட்​டிருந்​தது. அதன்​படி, தமிழக அரசின் கலை பண்​பாட்​டுத் துறை சார்​பில் மொரீஷியஸுக்கு 7 பேர் கொண்ட குழுவை நேற்று அரசு அனுப்​பி​வைத்​தது.

இக்​குழு​வில் வயலின் கலைஞர் மணி சோமசுந்​தரம், கீபோர்டு இசைக் கலைஞர் விஜயகு​மார் இன்​ப​ராஜ், தபேலா மற்​றும் மிருதங்​கக் கலைஞர் முரு​கன் ராஜ​மாணிக்​கம், பக்தி பாடகர்​கள் சீனி​வாசன் துரை​சாமி, சுஜா​தா, பேட் இசைக் கலைஞர் தியாக​ராஜன் நடராஜன், ஒருங்​கிணைப்​பாளர் கார்த்​தி​கேயன் ஆத்​தூர் கருணாகரன் ஆகியோர் இடம்​பெற்​றுள்​ளனர்.

இவர்​கள் அனை​வரும், மொரீஷியஸ் முரு​கன் கோயில்​களில் நடை​பெறும் தைப்பூச விழா​வில்​ தமிழில்​ பக்​திப்​ ​பாடல்​களை இசை​யுடன்​ ​பாட​வுள்​ளனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *