விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் வருகிற 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக தகவல்!!

சென்னை:
எப்போது தான் இவர்கள் திருமணம் நடக்கும்? என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டு ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்து முடிந்தது.

காதலை எப்படி சொல்லாமல் மறைத்து வந்தார்களோ, அதேபோல திருமண நிச்சயதார்த்தம் குறித்தும் இதுவரை இருவருமே வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனாலும் ராஷ்மிகா கையில் இருக்கும் நிச்சய மோதிரம் இதை உறுதி செய்துள்ளது.

இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் வருகிற 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஷ்மிகாவிடம், ‘உதய்பூரில் வருகிற 26-ந்தேதி திருமணமா?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு அப்படியெல்லாம் இல்லையே… என்று பதிலளித்துள்ளார் ராஷ்மிகா.


ராஷ்மிகாவின் இந்த திகைப்பூட்டும் பதிலால் மறுபடியும் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *