டி20 உ உலககோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும் – கிரிக்கெட் வீரர் நடராஜன்!!

சென்னை:
மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரில் புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.


இதில் சிறப்பு தலைமை விருந்தினர்களாக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், பிரபல திரைப்பட நடிகை தேவயானி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், திரைப்பட நடிகர் மணி ஆகியோர் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தனர்.

கிரிக்கெட் வீரர் நடராஜன் பந்து வீச அமைச்சர் லட்சுமி நாராயணன், நடிகை தேவயானி, நடிகர் மணி உள்ளிட்டோர் விளையாடினர். அப்போது நடிகை தேவயானிக்கு வீசப்பட்ட ஒரே பந்தில் அவர் கிளீன் போல்டானார்.


தொடர்ந்து நடிகர் தேவயானி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் நடராஜ் ஆகியோரிடம் ரசிகர்கள் ஆட்டோகிராப் பெற்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு நடராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது :-

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 260 ரன்கள் அடித்தது சிறப்பான தொடக்கம்.

இன்று முதல் டி20 உலககோப்பை தொடங்குகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற்று உலககோப்பையை இந்தியா மீண்டும் வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *